வெள்ளிக்கிழமை தோறும் பள்ளிகளில் போக்சோ சட்டம் விழிப்புணர்வு: கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தோறும் பள்ளிகளில் போக்சோ சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெறும் என்று கலெக்ர் ஆர்த்தி தெரிவித்தார்.
HIGHLIGHTS
கடந்த சில வருடங்களாகவே பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்து பல மாணவிகள் அச்சம் காரணமாக உயிர் இழக்கும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதைப் போக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பாலியல் தொந்தரவுகளில் இருந்து குறிப்பாக இளம் மாணவிகளை காக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ , மாணவிகளுக்கு போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்திடும் வகையில் அனைத்து மாவட்ட பள்ளி கல்வி துறை அலுவலர்களும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி முன்பு போஸ்கோ சட்டம் குறித்து அறிந்து கொள்வேன் என உறுதி மொழியும் , அங்கு அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பதாகை கையொப்பமும் இட்டனர்.
பள்ளி மாணவ, மாணவிகளுடன் உரையாடிய போது , மாணவிகள் போக்ஸோ சட்டம் குறித்து அறிந்து கொண்டு அனைத்து நண்பர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் பள்ளி வார இறுதி நாட்களின் பாட வகுப்பு போஸ்கோ சட்ட விழிப்புணர்வு குறித்து இருக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் , ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.