Begin typing your search above and press return to search.
அவளூரில் 26 பழங்குடியினர் தொகுப்பு வீடுகள் திறப்பு
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 2020 - 21 ஆம் ஆண்டிற்கான பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டது.
HIGHLIGHTS
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி , கர காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் அமைந்துள்ளது அவளூர் கிராமம்.
இக்கிராமத்தில் வசிக்கும் 26 பழங்குடியின குடும்பத்திற்க்கு தலா 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்கும் விழா ஒன்றிய குழு தலைவர் மலர் குடி குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் கலந்துகொண்டு வீடுகளை வழங்கி , பழங்குடியின மக்களுக்கு போர்வை, அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய செயலாளர் க.குமணன்,ஒன்றிய குழு துணை திவ்யபிரியா இளமது, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.