/* */

10 ஆண்டு வீதியில் கத்தியிருக்கிறேன் : சீமான் உருக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்

HIGHLIGHTS

10 ஆண்டு வீதியில் கத்தியிருக்கிறேன் : சீமான் உருக்கம்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஸ்ரீபெரும்புதூர் , காஞ்சிபுரம் , வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்

காஞ்சிபுரத்தில் பேசியபோது , 'கடந்த பத்தாண்டுகளாக 6 ஆயிரம் மணி நேரம் நெஞ்சு வெடிக்க, ரத்தம் வேர்வையாக உடம்பெல்லாம் உப்பு பூக்க பல்வேறு வீதிகளில் நின்று உங்களுக்காக கத்தியிருக்கிறேன். நாங்கள் கையேந்தி கேட்பது வாக்குகள் அல்ல. தம்பிகளின் தங்கைகளின் வாழ்க்கை நலனுக்காக. கடந்த பல ஆண்டுகளாக தேர்தலில் மாறிமாறி ஓட்டு போட்டு ஏமாந்த நிலையில், எல்லா கட்சிகளும் தற்போது கூட்டணிக்காக அலைந்து கொண்டு நோட்டு பேரம் , சீட்டு பேரம் என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில் நான் உங்களுக்காக வீதியில் கத்தி பேசிக்கொண்டிருக்கிறேன்.

முழுக்க முழுக்க 100% மக்களை நம்பி அசைக்க முடியாத நம்பிக்கையில் தனித்து போட்டி இட வருகிறேன். எனவே, இதையெல்லாம் புரிந்துகொண்டு மாற்றம் ஏற்படுத்த வரும் எங்களுக்கு நம்பிக்கையுடன் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 10 March 2021 6:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!