/* */

மருத்துவ அவசர ஊர்திகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தனியார் தொழிற்சாலை நிறுவனங்கள் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து வழங்கின

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இதற்கான மருத்துவ உபகரணங்கள் , மருந்துகள் , அவசர ஊர்த்திகள் அதிகளவில் தேவைப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் தங்களது சமூக பங்களிப்பு நிதியிலிருந்து நன்கொடை அளிக்க மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டது

அதன் அடிப்படையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் வி.பி.ஜி., நிசான் நிறுவனம் மற்றும் சேவாலாய நிறுவனம் இணைந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதி பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் 2 அவசர கால மருத்துவ ஆம்புலன்ஸ் ஊர்திகளை வழங்கின. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.பன்னீர்செல்வம், வி.பி.ஜி. நிறுவன பொது மேலாளர் திரு.சதிஷ், மேலாளர் திரு.பாலாஜி ஆகியோர் இருந்தனர்.

இதேபோல் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் மேண்டோ தொழிற்சாலை நிறுவனம், எஸ்.என்.எஸ். அறக்கட்டளை இணைந்து சமூக பங்களிப்பு நிதியிலிருந்து ரூ.7.20 இலட்சம் மதிப்பிலான 10 ஆக்ஸிஜன் செறிவூட்டி உபகரணங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களிடம் மனிதவள மேம்பாட்டு அலுவலர் திரு.ராமகிருஷ்ணன்‌, மேலாளர்கள் திரு.சேகர், திரு.கார்த்திக் ஆகியோர் வழங்கினர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.பன்னீர்செல்வம் இருந்தார்.

Updated On: 18 May 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது