மருத்துவ அவசர ஊர்திகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நன்கொடை
ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தனியார் தொழிற்சாலை நிறுவனங்கள் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து வழங்கின
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இதற்கான மருத்துவ உபகரணங்கள் , மருந்துகள் , அவசர ஊர்த்திகள் அதிகளவில் தேவைப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் தங்களது சமூக பங்களிப்பு நிதியிலிருந்து நன்கொடை அளிக்க மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டது
அதன் அடிப்படையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் வி.பி.ஜி., நிசான் நிறுவனம் மற்றும் சேவாலாய நிறுவனம் இணைந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதி பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் 2 அவசர கால மருத்துவ ஆம்புலன்ஸ் ஊர்திகளை வழங்கின. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.பன்னீர்செல்வம், வி.பி.ஜி. நிறுவன பொது மேலாளர் திரு.சதிஷ், மேலாளர் திரு.பாலாஜி ஆகியோர் இருந்தனர்.
இதேபோல் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் மேண்டோ தொழிற்சாலை நிறுவனம், எஸ்.என்.எஸ். அறக்கட்டளை இணைந்து சமூக பங்களிப்பு நிதியிலிருந்து ரூ.7.20 இலட்சம் மதிப்பிலான 10 ஆக்ஸிஜன் செறிவூட்டி உபகரணங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களிடம் மனிதவள மேம்பாட்டு அலுவலர் திரு.ராமகிருஷ்ணன், மேலாளர்கள் திரு.சேகர், திரு.கார்த்திக் ஆகியோர் வழங்கினர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.பன்னீர்செல்வம் இருந்தார்.