/* */

வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உண்டியல் வசூல் ரூ. 5.97 லட்சம்

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக 5லட்சத்து ரூ.97ஆயிரம் கிடைத்தது.

HIGHLIGHTS

வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உண்டியல் வசூல் ரூ. 5.97 லட்சம்
X

காஞ்சிபுரம்  வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இத்திருக்கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினால் சட்டரீதியான வழக்குகள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் தீரும் என்ற ஐதீகம் உள்ளது.

இதனால் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்திச் செல்வது வழக்கம். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் உள்ள மூன்று உண்டியல்கள், ஆறு மாதங்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா தலைமையில் கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், குமரன், பிரித்திகா ஆகியோர் முன்னிலையில் இன்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் ரூ.5,97,139 கிடைத்தது. அப்போது ஆலய எழுத்தர் மணிகண்டன் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 7 May 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...