/* */

ரெம்டெசீவிர் மருந்து ஓதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரெம்டெசீவிர் மருந்து கூடுதலாக ஓதுக்கீடு செய்ய மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை

HIGHLIGHTS

ரெம்டெசீவிர் மருந்து ஓதுக்கீட்டை அதிகரிக்க  கோரிக்கை
X

ரெம்டெசிவிர் மருந்து (மாதிரி படம்) 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஓரே நாளில் 836 பேர் பாதிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 3399 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அதிக அளவில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை, கூடுதல் மருத்துவர்கள் நியமனம், மருந்துகள் பற்றாக்குறை என பல குறைகளை மாவட்ட நிர்வாகிகளிடம் மருத்துவமனை நிர்வாகிகள் முறையாக தெரிவிப்பதில்லை.

செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் செய்தியாளர்கள் முறையிட்டபோது, மருத்துவமனை நிர்வாகிகள் பதிலேதும் கூறாமல் மௌனமாக நின்றனர்.

மேலும் ரெம்டிசிவர் மருந்துக்கான ஒதிக்கீடு குறைந்த அளவே வருவதாகவும், வாரத்திற்கு 600 தேவைப்படும் நிலையில் 60 மட்டுமே மருத்துவமனைக்கு கிடைக்கப் பெறுவதாக மருத்துவமனை நிர்வாகி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து அதிக ஒதுக்கீட்டுக்கு பரிந்துரை செய்ய கேட்டுக் கொண்டார்

இவ்வளவு நாளாக இம்மருந்து ஓதுக்கீடு குறித்து எந்த தகவலையும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், ஆக்ஸீஜன் பற்றி மட்டுமே தகவல் அளித்துள்ளனர். இம்மருந்தை நோயாளியை வாங்கி வர பரிந்துரைப்பது ஏன் எள செய்தியாளர்கள் கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் மவுனத்தை மட்டுமே பதிலாக அளித்தது.

Updated On: 8 May 2021 6:43 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை