முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7ம் ஆண்டு நினைவஞ்சலி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காஞ்சி மாவட்ட அதிமுக சார்பில் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் காஞ்சி மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வந்த ஜெயலலிதா கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று அவரின் ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி அதிமுக சார்பில் அனுசரிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அவரது திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கட்சி நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் , கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் சார்பிலும் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர் அதிமுக தொண்டர்களும் நினைவஞ்சலியை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் பெரியார் துணை அருகே மதியம் 500 நபர்களுக்கு மாவட்ட கழக பொருளாளர் வள்ளிநாயகம் மற்றும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் ஏழை எளிய மக்களுக்கு புளி சாதம் சாம்பார் சாதம் மற்றும் வெஜிடபிள் ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டது.