அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடம் மாற்ற விவசாயிகள் கோரிக்கை
காஞ்சிபுரம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடம் மாற்ற செய்ய கோரி விவசாயிகள் மனு அளிக்க வந்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சொர்ணாவாரி பருவத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. இதன் அறுவடை காலம் தொடங்கிய நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைவாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 31 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த வாரம் ஒவ்வொரு பகுதியாக திறக்கப்பட்டது. இந்நிலையில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தாநல்லூர் பகுதியில் கடந்த பருவத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் கொள்முதல் செய்ய அங்கு திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்த விவசாயிகளின் நெல்களும் கொள்முதல் செய்யப்பட்டது.
தற்போதைய பருவ அறுவடை நெல் கொள்முதல் செய்ய அப்பகுதியில் திறக்காமல் அருகில் உள்ள மற்றொரு பகுதிக்கு இந்த நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் அதே பகுதியில் மேற்கொள் முதல் நிலையம் அமைக்க கோரி மனு அளித்தனர்.
வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூர் பகுதியில் மீண்டும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி மனு அளிக்க வந்த விவசாயிகள்.