/* */

ஆட்சியர் பேச்சு வார்த்தை தோல்வி: கிராம சபை கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு

இரண்டாவது பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஏகனாபுரம் கிராம மக்கள் போராடி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆட்சியர் பேச்சு வார்த்தை தோல்வி:  கிராம சபை கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு
X

இரண்டாவது பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க உள்ள நிலையில் அக்கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்.

ஏகனாபுரம் கிராம மக்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி.திட்டமிட்டபடி நாளை வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் , கிராமசபை கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு என அறிவித்த விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர்.

சுதந்திர இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா நாளை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

தமிழகத்தில் சுதந்திர தின நாள் விழாவை ஒட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தி அதில் அரசு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றி கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் 386 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாளை நடைபெற உள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தை நாளை புறக்கணித்து வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த உள்ளதாக ஏகனாபுரம் போராட்டக் குழு அறிவிப்பு வெளியிட்டது. நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து அக்கிராம மக்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இறுதியாக போராட்டக் குழுவினர், திட்டமிட்டபடி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், கிராம சபை கூட்டம், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட புறக்கணிக்க திட்டமிட்டுள்ளபடி நடக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .பாதுகாப்புக்காக காவல்துறையினர் அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ளனர்

Updated On: 14 Aug 2023 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது