ஆட்சியர் பேச்சு வார்த்தை தோல்வி: கிராம சபை கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு
இரண்டாவது பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஏகனாபுரம் கிராம மக்கள் போராடி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஏகனாபுரம் கிராம மக்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி.திட்டமிட்டபடி நாளை வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் , கிராமசபை கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு என அறிவித்த விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர்.
தமிழகத்தில் சுதந்திர தின நாள் விழாவை ஒட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தி அதில் அரசு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றி கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் 386 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாளை நடைபெற உள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தை நாளை புறக்கணித்து வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த உள்ளதாக ஏகனாபுரம் போராட்டக் குழு அறிவிப்பு வெளியிட்டது. நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து அக்கிராம மக்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இறுதியாக போராட்டக் குழுவினர், திட்டமிட்டபடி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், கிராம சபை கூட்டம், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட புறக்கணிக்க திட்டமிட்டுள்ளபடி நடக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .பாதுகாப்புக்காக காவல்துறையினர் அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ளனர்