/* */

காஞ்சியில் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினருக்கு இடையே வாக்குவாதம்

புதிய காய்கறி சந்தைக்கு செல்ல வியாபாரிகளுக்கு முறையான அடையாள அட்டை பெருநகராட்சி வழங்காததால் காவல்துறையினருக்கும் பெரு நகராட்சி ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

காஞ்சியில் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினருக்கு இடையே வாக்குவாதம்
X

மாநகராட்சி ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட காட்சி.

காஞ்சிபுரத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு இன்று முதல் மாற்றம் செய்வதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பெருநகராட்சி அறிவித்திருந்தது.

மேலும் இந்த காய்கறி சந்தையில் வியாபாரிகள் மட்டுமே பொருட்களை வாங்க முடியும் எனவும் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படமாட்டாது என கூறிய பெருநகராட்சி வியாபாரிகளுக்கான அடையாள அட்டையை முறையாக வழங்காததால் இன்று துவக்க நாளில் காவல்துறை அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே பொருட்களை வாங்க அனுமதித்தனர்.

காவல்துறைக்கு முன்பே வியாபாரிகள் தங்களது இருசக்கர வாகனத்தில் பேருந்து நிலையத்தில் காய்கறி கடைகளை முன் நிறுத்தி பொருட்களை வாங்கியதால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இதைக்கண்ட காவல் ஆய்வாளர் உடனடியாக அனைத்து வாகனங்களையும் வெளியேற்றி அனுமதி உள்ளவர்கள் மட்டுமே காய்கறி வாங்க அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பெரு நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு கடும் வாக்குவாதங்கள் நிலவியது. அடையாள அட்டை வழங்கும் பணியை முறையாக மேற்கொள்ளாதது அப்பகுதியில் சமூக இடைவெளியை கண்காணிக்க பெருநகராட்சி ஊழியர்கள் மெத்தனம் காட்டியது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதேபோல் மற்றொரு பகுதியான ஓரிக்கை பேருந்து நிலையத்தில் முறையாக கடைகளை வியாபாரிகளுக்கு ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் ஒரு சில கடைகள் மட்டுமே இயங்கியது வியாபாரிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Updated On: 20 May 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...