புதிய அரசு கட்டிடங்கள்- எம்எல்ஏ., திறந்து வைப்பு
காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டிடங்களை எம்எல்ஏ., திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் எம்எல்ஏ., எழிலரசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளிக்கட்டிடம் , அங்கன்வாடி மையங்கள் , ரேசன்கடை கட்டிடம் ,குடிநீர் தொட்டிகள் என மக்களின் அத்தியாவசிய பயன்களுக்கான பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட ஆலடி தோப்பு தெரு பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை கட்டிடத்தை எழிலரசன் எம்எல்ஏ., திறந்து வைத்து பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
கீழம்பி பகுதியில் இயங்கி வரும் பள்ளிக்கு ரூ.17.5 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.இதே போல் இந்திரா நகர் பகுதியில் ரூ.13.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரேசன் கடை கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் ஆனந்தஜோதி , திமுக நகர செயலாளர் ஆறுமுகம் , சி.வி.எம்.சேகர், சந்துரு , ஒன்றிய செயலாளர் குமார் , தசரதன் , தமிழ்செல்வன் , நீலகண்டன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.