/* */

ஏ.டி.எம் கார்டை மாற்றி கல்லூரி மாணவியிடம் ரூ.29,000 மோசடி

கள்ளக்குறிச்சியில், ஏடிஎம் கார்டை மாற்றி, கல்லூரி மாணவியிடம் ரூ.29,000 மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

ஏ.டி.எம் கார்டை மாற்றி கல்லூரி மாணவியிடம் ரூ.29,000 மோசடி
X

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த புக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகள் நந்தினி, 20; தனியார் கல்லுாரியில் பி.காம்., படித்து வருகிறார். இவர், கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் பணம் இருப்பை அறிய சென்றிருந்தார். அவருக்கு பின்னால் நின்றிருந்த நபர், 'உங்களுக்கு பார்க்கத் தெரியவில்லை. கார்டை கொடுங்கள், நான் பார்த்துத் தருகிறேன்' எனக்கூறி, ஏ.டி.எம்., கார்டை வாங்கியவர், வேறு கார்டை மாற்றிக் கொடுத்துள்ளார்.

இதனை கவனிக்காமல் வெளியே சென்ற நந்தினிக்கு, சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து, 29 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக, மொபைல்போனுக்கு தகவல் வந்துள்ளது. அப்போதுதான், அவரது ஏடிஎம் கார்டு மாற்றி கொடுக்கப்பட்டது தெரியவந்தது. நந்தினி அளித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Updated On: 24 Dec 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  4. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  5. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  6. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  7. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  8. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  9. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்