/* */

கடலூரில் இடிந்து விழும் நிலையில் இருந்த நிழற்குடையை அகற்றிய மாநகராட்சி

கடலூரில் வெள்ளப்பெருக்கு மண் அரிப்பினால் இடிந்து விழும் நிலையில் இருந்த நிழற்குடையை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.

HIGHLIGHTS

கடலூரில் இடிந்து விழும் நிலையில் இருந்த நிழற்குடையை அகற்றிய மாநகராட்சி
X

கடலூரில் இடிந்த நிலையில் இருந்த நிழற்குடை அகற்றப்பட்டது.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகள் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள், மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

வெள்ள நீர் வடிய தொடங்கிய நிலையில் கடலூரில் மூன்று நாட்களாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது இதன்கரணமாக தென்பெண்ணை ஆற்றில் 20 ஆயிரம் கனஅடி நீர் கடலில் கலக்கிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள நிழற்குடை மண் அரிப்பின் காரணமாக இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் வந்து பார்வையிட்டனர், அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு பயணிகள் நிழற்குடையை காவல்துறையினரின் உதவி கொண்டு தகர்த்தனர்.

மேலும் தென்பெண்ணை ஆற்றில் நீர் அதிகமாக வருவதால் பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பண்ருட்டி செல்லும் இணைப்புச் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 Nov 2021 4:04 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி