/* */

கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற கலெக்டர் வேண்டுகோள்
X

அரியலூர் மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

அரியலூர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட, கால்நடை வளர்ப்பினை உபதொழிலாக கொண்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் அரசுடைமை வங்கிகள் மூலம் கால்நடைகள் பராமரிப்பிற்காக கிசான் கடன் அட்டை வழங்கி கடனுதவி செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறுவதற்கு ஏதுவாக, மாவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வரும் 2022, பிப்ரவரி 15-ம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. இதற்காக அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுவருகின்றன.

எனவே, கிசான் கடன் அட்டை மூலம் பயன்பெற ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்போர்கள், தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல், சமீபத்திய இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் தங்களிடம் உள்ள கால்நடைகள் எண்ணிக்கை விவரம் (ம) நில உடைமை அளவு ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்கவும்.

பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றிய அளவிலான ஒருங்கிணைப்புக் குழு மூலமாக பரிசீலிக்கப்பட்டு, கால்நடை வளர்ப்போர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்க பரிந்துரைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 8 Dec 2021 9:23 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி