விபத்தில் மனைவி உயிரிழப்பு: கணவருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு
லாரி விபத்தில் மனைவி பலி, கணவருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவு.
HIGHLIGHTS
லாரி ஏற்படுத்திய விபத்தில், மனைவி பலியான நிலையில், கணவரின் கால் துண்டானது, இழப்பீடாக, 30 லட்சத்து, 47 ஆயிரத்து, 80 ரூபாய் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சர்க்கரை (41) கட்டட மேஸ்திரி. இவரது மனைவி திலகா (35). இருவரும் 2016 மார்ச் 2ல், திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் பைக்கில் சென்றபோது, இளஞ்செழியன் என்பவருக்கு சொந்தமான லாரி, பைக் மீது மோதியதில் திலகா பலியானார். சர்க்கரையின் கால் துண்டானது. இதுகுறித்த வழக்கு, திருவண்ணாமலை மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நீதிபதி ஜெகன்நாதன், லாரிக்கு இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தால், லாரி உரிமையாளர் இளஞ்செழியன், தன் சொந்த பணத்தில் திலகா இறப்புக்கு, 14 லட்சத்து, 98 ஆயிரத்து, 380 ரூபாய், சர்க்கரைக்கு, 15 லட்சத்து, 48 ஆயிரத்து, 700 ரூபாய் மற்றும் வட்டி, வழக்கு செலவு தொகையுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.