Begin typing your search above and press return to search.
அண்ணாமலையார் கோவிலில் வேதங்கள் படிக்கும் நிகழ்வு
அண்ணாமலையார் கோவிலில் சிவாச்சாரியார்கள் கோவிலுக்குள் நான்கு வேதங்கள் பாராயணம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது
HIGHLIGHTS
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. அந்த வகையில், சிவாச்சாரியார்கள் ரிக், சாம, யஜுர், அதர்வண ஆகிய நான்கு வேதங்களையும் விரதமிருந்து படித்து வருவது திருவிழாவின் சிறப்புகளில் ஒன்றாகும் . அதன்படி இன்று சிவாச்சாரியார்கள் கோவிலுக்குள் நான்கு விதமான வேதங்களை படிக்கத் தொடங்கும் நிகழ்வு இன்று துவங்கியது.
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தபடியும், திருவாசகம் பாடிய படியும் சிவனடியார்கள் வருவது வழக்கம் . அதன்படி இன்று காலை முதல் சிவனடியார்கள் திருவாசகம் பாடிய படி ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தனர்.