திருவண்ணாமலை: மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் 621 மனுக்கள்
Grievance Redressal Committee - திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் 621 மனுக்கள் பெறப்பட்டன
HIGHLIGHTS
Grievance Redressal Committee -திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். இதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 621 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2