/* */

தையல் கலை தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தையல் கலை தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்
X

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட தையல் கலை தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. பொது செயலாளர் வீரபத்திரன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை தைத்து கொடுத்து வரும் திருவண்ணாமலை தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கம் மற்றும் வந்தவாசி அன்னை சத்யா மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுக்கு கடந்த 10 ஆண்டுகளாக புதிய உறுப்பினர் சோக்கை இல்லை.

எனவே அதில் பெண் தையல் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும். சமூக நலத்துறையில் இலவச தையல் எந்திரம் கேட்டு விண்ணப்பித்து உள்ள தகுதியானவர்கள் அனைவருக்கும் தையல் எந்திரம் வழங்கிட வேண்டும். தையல் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். நலவாாரியத்தில் பதிவு செய்து 60 வயது பூர்த்தியானவர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தையல் கலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Updated On: 22 March 2022 6:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  2. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  4. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  5. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  6. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  10. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்