Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டதால், மாணவ மாணவியர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்
HIGHLIGHTS
தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூாிகள் இன்று முதல் திறப்பு. நண்பர்களைக் காண மாணவர்கள் உற்சாகமாவே வந்திருந்தனர்:
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்து கிருமி நாசினி தெளித்து பின்பு பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களிடையே கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு பற்றி மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் முருகேஷ் உரையாற்றினார்.