Begin typing your search above and press return to search.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதுபான கடை, பார்களுக்கு விடுமுறை
சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 4, 5, 6 மற்றும் மே 2 ஆகிய தினங்களில் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும்
HIGHLIGHTS
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 1981 விதியின் சட்டமன்ற பொது தேர்தல்-2021 தேர்தலை முன்னிட்டு 04.04.2021-ம் தேதி காலை 10.00 மணி முதல் 05.04.2021-ம் தேதி மற்றும் 06.04.2021-ம் தேதி இரவு 12.00 மணி வரையிலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்: 02.05.2021 ஆகிய தினங்களில் நாள் முழுவதும் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் (பார்கள்), எப்எல்1, எப்எல்2, எப்எல்3, எப்எல்3ஏ, எப்எல்3ஏஏ மற்றும் எப்எல்11 உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் மற்றும் எப்எல்4ஏ உட்பட அனைத்து மதுபானக் கடைகளிலும் மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் மூடிவைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.