/* */

திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்..!

நகராட்சி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு  விலையில்லா சைக்கிள்..!
X

மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கிய கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது

விழாவுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன் முன்னிலை வகித்தார். விழாவில் 2,799 மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மேலும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் இருந்து மேசை, இருக்கைகள் வழங்கப்பட்டன.

விழாவில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-

இப்பள்ளி, மாவட்டத்தின் முதன்மை பள்ளியாக திகழ்கிறது. 10, 12-ம் வகுப்புகளில் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் சிறப்பாக உள்ளது. தேர்ச்சி மட்டுமே முக்கியத்துவம் கிடையாது. மதிப்பெண் அதிகமாக எடுப்பது தான் முக்கியம். அதற்காக முயற்சி எடுக்க வேண்டும். உங்களால் எதுவும் முடியும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளிப்பருவத்தில் உங்களுடைய திறமையை வெளிக்கொண்டு வருவது கட்டாயம்.

உங்களை குறைகூறுபவர்களையும், மட்டம் தட்டி பேசுபவர்களையும் கண்டு கொள்ளக் கூடாது. இலக்கை அடைவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும். உலகம் கைக்குள் அடங்கி உள்ளது. மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். மாணவர்களை தினமும் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கான பாதையை காட்ட வேண்டும். மாணவர்களின் வாழ்வில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது என நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

முன்னதாக மாநில தடகள சங்க துணை தகவலை டாக்டர் எ.வ.வே.கம்பன் பேசுகையில்,

''தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படிக்கும் மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து ஒரு தந்தையாக செயல்படுகிறார். அரசின் திட்டங்களை பயன்படுத்தி வரும் காலங்களில் 100 சதவீத தேர்ச்சியை கொடுக்க வேண்டும்'' என்றார்.

நிகழ்ச்சியில், நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், தி.மு.க.நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்டத் துணைச் செயலாளர் பிரியாவிஜயரங்கன், முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் டி.வி.எம்.நேரு , நகர மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Aug 2023 1:32 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்