Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலையில் உணவு பொட்டலங்கள் தயாரிக்கும் பணி:துணை சபாநாயகர் ஆய்வு
அண்ணாமலையார் கோயில் அன்னதான கூடத்தில் உணவு பொட்டலங்கள் தயாரிக்கும் பணியை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி நேரில் ஆய்வு செய்தார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தினமும் 5000 உணவு பொட்டலங்கள் தயார் செய்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்களுக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அன்னதான கூடத்தில் உணவு பொட்டலங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக அரசு துணை சபாநாயகர் திரு கு. பிச்சாண்டி அவர்கள், மாவட்ட ஆட்சியர் அவர்களும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.