/* */

கிரிவலப் பாதையில் உள்ள கடைகளில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

கிரிவலப் பாதையில் உள்ள கடைகளில் ஆட்சியர் ஆய்வு
X

கிரிவலப் பாதையில் உள்ள கடைகளில் உணவுப் பொருட்களை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் 

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் பாதையில் உள்ள கடைகளில் பக்தர்களுக்கு காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று நடைபெறுகிறது. அதை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். எனவே, சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகளை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் நேற்று இரவு மீண்டும் ஆய்வு செய்தார். அதன்படி, கிரிவலப் பாதையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களை எச்சரித்தார்.

கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக நடைபாதையில் கடைகளில் முன்பு வைத்திருந்த சேர்களை அகற்ற உத்தரவிட்டார்.

மேலும், கிரிவல பாதையில் உள்ள டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் டீத்தூள் தரமானதா, உணவுப் பொருட்கள் தரமானதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. டீ கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தக் கூடாது என கலெக்டர் எச்சரித்தார். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.

அதை தொடர்ந்து, கிரிவல பாதையில் உள்ள ஒரு கடையில் குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அந்த குடிநீர் பாட்டில் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட கடைக்கு ரூ. 5000 அபராதம் விதித்து, அதனை வசூலிக்குமாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கிரிவலப் பாதையில் உள்ள நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார். மேலும் தற்காலிக கழிவறைகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் 14 கிலோமீட்டர் முழுவதும் குடி தண்ணீர் வசதிகள் உள்ளதா என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

தொடர்ந்து காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளிட்டவையும் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா ,கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குகிறதா என்பதையும் ஆய்வு செய்து அனைத்து முறையான பாதுகாப்பு அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தித் தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை காஞ்சி சாலை கிரிவலப் பாதையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், வருவாய் கோட்டாட்சியர் , நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்

Updated On: 23 April 2024 12:59 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...