/* */

ஊரடங்கு உத்தரவால், மணமக்களுக்கு கோவிலுக்குள் அனுமதி மறுப்பு.

முன்பதிவு செய்த திருமண ஜோடிகளை அண்ணாமலையார் கோவிலில் உள்ளே அனுமதிக்காததால் மணக்கோலத்துடன் வெளியே காத்திருந்தனர்

HIGHLIGHTS

ஊரடங்கு உத்தரவால், மணமக்களுக்கு கோவிலுக்குள் அனுமதி மறுப்பு.
X

திருவண்ணாமலை கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால், வெளியே கூடி நின்ற மணவீட்டார்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முகூர்த்த நாள் என்பதால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் கூடினர். திருமணத்திற்கு முன்பதிவு செய்த மணமக்கள், ஒவ்வொரு தம்பதிகளுடன் 40-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் கோவிலின் ராஜகோபுரம் அடைக்கப்பட்டு கோவில் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை.

காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் அனுமதிக்காததால், கோவில் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரிடம் மணவீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். தம்பதிகள் மணக்கோலத்துடன் கோயில் வாயில் முன்பாக காத்திருந்தனர். இதனிடையே ஒரு சில ஜோடிகள், குறித்த முகூர்த்த நேரத்தில் ராஜகோபுரம் வெளியிலேயே மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பின்னர் கோவில் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மணமக்களுடன் பத்து நபர்கள் என அனுமதித்தனர்.

Updated On: 25 April 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!