திருநெல்வேலியில் தூய்மைப் பணி!
திருநெல்வேலியில் தூய்மைப் பணி!
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் துணை ஆணையர் தாணுமாலை மூர்த்தி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோர் ஆலோசனையின்படி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாநகராட்சியில் ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மேலப்பாளையம் தைக்கா தெரு பகுதிகலில் சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்றன. இதில் சுகாதார ஆய்வாளர் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். மேலப்பாளையம் பகுதி மாநகராட்சி பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
தச்சநல்லூர் மண்டலம் கைலாசபுரம் பகுதியில் தைப்பூச மண்டபம் அருகே மரக்கன்றுகளும் நடப்பட்டன. இதில் மண்டலத் தலைவர், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.