குமரி, நெல்லையில் தொடரவுள்ள மழை! வேற லெவல் அப்டேட்!
குமரி, நெல்லையில் தொடரவுள்ள மழை! வேற லெவல் அப்டேட்!
HIGHLIGHTS
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் பெரும்பலான பகுதிகளில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு எனவும் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய அதி தீவிர மொக்கா புயல் வடக்கு வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்ரு காலை 8 மஇணி அளவில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் போர்ட் பிளேரில் இருந்து சுமார் 850 கிலோ மீட்டர் வடக்கு வட மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதி தீவிர புயலாக மாறி கடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. காற்றின் வேகம் மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று கூறப்படுகிறது.
இந்த புயலின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிறு, திங்கள்கிழமைகளில் மிதமான மழை செவ்வாய், புதன்கிழமைகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.