சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய பிரமுகர்கள் பங்கேற்பு.
HIGHLIGHTS
நெல்லை அடுத்துள்ள சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பகுதி தலைவர் ஷேக் முகமது பயாஸ் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் ஜாகிர் உசேன் வரவேற்புரையாற்றினார். பகுதி பொருளாளர் பீர் மற்றும் 6,7 வது வார்டு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மாவட்ட செயலாளர் இம்ரான் அலி, எஸ்டிபிஐ கட்சி மாநகர் மாவட்ட அமைப்புச் செயலாளர் எஸ் எஸ் ஏ கனி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அதிரதன், எம்எஸ் பரமசிவம், பாஸ்டர் அமிர்த குமார், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாவட்டத் தலைவர் ராஜசேகர், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், மதினா ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக 6வது வார்டு தலைவர் சதாம் உசேன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் பகுதி தலைவர் இலியாஸ் செய்தார்.