தூத்துக்குடியில் அக்.2ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடல்: ஆட்சியர் தகவல்
தூத்துக்குடியில் அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 02.10.2021 அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)-ன் படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைககள், மதுக்கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 ஆகிய உரிமத்தலத்திலான பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றையதினம் மதுபான விற்பனை நடைபெறாது. அன்றைய தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.