Begin typing your search above and press return to search.
சட்டவிரோதமாக மது விற்பனை: 7 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 7 பேர் கைது : 74 மதுபாட்டில்கள் பறிமுதல்.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆழ்வார்திருநகரி, எட்டையபுரம், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 4 காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, 7 நபர்கள் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீசார் பதிவு செய்து 7 நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 74 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.