தேர்தலில் போட்டியிட கீதாஜீவன் விருப்ப மனு தாக்கல்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கீதாஜீவன் எம்எல்ஏ சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று விருப்பமனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டசபையின் பதவி காலம் மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. பொதுத்தேர்தலில், திமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் 17-02-2021 முதல் 24-02-2021 வரை சென்னை தலைமை கழகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் எம்எல்ஏ, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொது செயலாளர் துரைமுருகனிடம் விருப்ப மனு தாக்கல் செய்தார். அது போல் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மார்க்கண்டேயன் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச் செயலாளர் கீதா முருகேசன், அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி பாலன், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், முன்னாள் மாநகர தலைவர் கோட்டுராஜா, தொண்டரணி ரமேஷ், பொறியாளர் அணி அன்பழகன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், சுரேஷ், மேகநாதன், பாலகுருசாமி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.