/* */

ரயில்வே மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை

ரயில்வே மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை
X

பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக மண் பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 4 வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தென்காசியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக பாவூர்சத்திரம் பகுதியில் கையகப்படுத்தப்படவுள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்கள், கடைகள், வீடுகள் அளவீடு செய்யப்பட்டு, இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 4 வழிச்சாலையில், பாவூர்சத்திரம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமையவுள்ள இடத்தில் மண் பரிசோதனை செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேம்பால தூண்கள் அமைக்க மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இழப்பீடு வழங்குதல், சாலையோர மரங்கள், ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், விரைவில் நான்கு வழிச்சாலைப்பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என தெரிகிறது.

Updated On: 14 April 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  3. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  4. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  5. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  6. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  7. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  8. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...