Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டையில் சாலையோர மரங்கள் வெட்டி சாய்ப்பு, நடவடிக்கை கேட்டு சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார்
புதுக்கோட்டையில் சாலயோரங்களில் உள்ள மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை கேட்டு சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் செய்தனர்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை நகர பகுதிக்குட்பட்ட கீழராஜ வீதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மர ஆர்வலர்களால் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த மரக்கன்றுகள் பெரிதாக வரக்கூடிய சூழ்நிலையில் நேற்று இரவு ஒரு தனியார் கடைக்கு இடையூறாக இருந்ததால் அதனை வெட்டியுள்ளனர்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த மர ஆர்வலர்கள் இன்று அந்த இடத்தை பார்வையிட்டு அங்கிருந்து ஊர்வலமாக புதுக்கோட்டை நகர காவல்நிலையத்திற்கு சென்றனர். அங்கு காவல்துறையினரிடம் மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு கொடுத்தனர்.