Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டை மாவட்ட வரலாற்று நூல் வெளியீட்டு விழா
திருமயத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்ட வரலாற்று நூல் வெளியிடப்பட்டது.
HIGHLIGHTS
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 14-வது மாநாடு திருமயத்தில் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது.
மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வேலை அறிக்கையையும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பொன்னி வரவு-செலவு கணக்குகளையும் சமர்பித்தனர்.
மாநாட்டில் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாரகராஜன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.