Begin typing your search above and press return to search.
கணவருடன் கருத்து வேறுபாடு: பெண் தூக்கிட்டு தற்கொலை
நாமக்கல் அருகே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விரக்தியடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
HIGHLIGHTS
நாமக்கல் பெரியப்பட்டி பழனியப்பா காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் பிரியதர்ஷினி (27). இவருக்கும், அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். பிரியதர்ஷினி தனது குழந்தைகளுடன் பழனியப்பா காலனியில் வசித்து வந்தார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விரக்தியில் இருந்த அவர், வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.