நாமக்கல் மாவட்டத்தில் இன்று 16 மையங்களில் கோவாக்சின் 2வது தவணை தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 16 மையங்களில் கோவாக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்படுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் :
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 16 மையங்களில் கோவாக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்படுகிறது.
இன்று கோவாக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்படும் மையங்கள் விபரம்:
திருச்செங்கோடு வட்டாரம் சீத்தாரம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ராசிபுரம் வட்டாரம் பிள்ளாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம். பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி, எலந்தக்குட்டை, மாரக்கால்காடு ஆரம்ப சுகாதார நிலையங்கள். நாமக்கல் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், எர்ணாபுரம், முதலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள். நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், பரமத்தி மற்றும் நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள். மோகனூர், மாணிக்கம்பாளையம், மல்லசமுத்திரம், ஓ.சவுதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 16 மையங்களில் இன்று கோவாக்சின் தடுப்பூசி 2வது தவணைமட்டும் போடப்படுகிறது. 28 நாட்களுக்கு முன் முதல் தவணை கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் அதற்கான சான்றுடன் வந்து இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.