நாமக்கல் மாவட்டத்தில் இன்று 18 மையங்களில் 2வது தவனை தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 18 மையங்களில் கோவாக்சின் இரண்டாவது தவனை தடுப்பூசி போடப்படுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 18 மையங்களில் கோவாக்சின் இரண்டாவது தவனை தடுப்பூசி போடப்படுகிறது. மொத்தம் 5,440 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று கோவாக்சின் இரண்டாவது தவனை தடுப்பூசி போடப்படும் மையங்கள் விபரம்:
திருச்செங்கோடு வட்டாரம் இறையமங்கலம், சீத்தாரம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ராசிபுரம் வட்டாரம் பிள்ளாநல்லூர், நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி, மாரக்கால்காடு ஆரம்ப சுகாதார நிலையம். நாமக்கல் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், சின்ன முதலைப்பட்டி அரசு பள்ளி, எர்ணாபுரம், முதலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம். நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், பரமத்தி மற்றும் நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம். மோகனூர், மாணிக்கம்பாளையம், மல்லசமுத்திரம், ஓ.சவுதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 18 மையங்களில் இன்று கோவாக்சின் தடுப்பூசி 2வது தவனை மட்டும் போடப்படுகிறது.