/* */

தமிழக நிதியமைச்சரின் அறிவிப்பால் லாரித்தொழில் நலிவடையும் அபாயம்

தமிழகத்தில் லாரித்தொழில் நலிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழக நிதியமைச்சரின் அறிவிப்பால் லாரித்தொழில் நலிவடையும் அபாயம்
X

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகக்குழு கூட்டத்தில், மாநில சம்மேளன செயலாளர் வாங்கிலி பேசினார்.

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவரும், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளருமான வாங்கிலி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

12 லட்சம் லாரிகள்:

தமிழகத்தில் லாரிகள், ட்ரெய்லர்கள், டேங்கர்கள், மினி லாரிகள், சரக்கு ஆட்டோக்கள் உள்ளிட்ட சுமார் 12 லட்சம் சரக்கு வாகனங்கள் உள்ளன. மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளாக நாள்தோறும் டீசல் விலையை கடுமையாக உயர்த்தி வந்துள்ளது. நாள்தோறும் டீசல் விலை உயர்த்தப்பட்டதால், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப லாரி வாடகையை உயர்த்த முடியவில்லை. இந்த நிலையில் நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம், இன்சூரன்ஸ் பிரிமியம் போன்றவையும் உயர்த்தப்பட்டன. கடந்த 17 மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் லாரிகளுக்கு போதிய சரக்கு லோடு கிடைக்காமல், பல லாரிகள் ஆங்காங்கு காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொழிலில் தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டத்தால் லாரிகளுக்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்கான இஎம்ஐ செலுத்த முடியவில்லை. பல இடங்களில் நிதி நிறுவனத்தினர் கடனுக்காக லாரிகளை பறிமுதல் செய்து நிறுத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் தமிழகம் முழுவதும் சுமார் 25 சதவீத லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து தங்களின் லாரிகளை இயக்க முடியாமல் தொழிலை விட்டு வெளியேறி சென்றுவிட்டனர்.

அரசுக்கு வருமானம்:

தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவகங்களில் லாரிகளுக்கான கட்டணம், வரி போன்றவற்றால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.5,624 கோடி தமிழக அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இது தவிர மாநில எல்லைகளில் உள்ள ஆர்டிஓ செக்போஸ்ட்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.328 கோடி வருவாய் கிடைக்கிறது. மாநிலம் முழுவதும் இந்த துறைக்கு ஆண்டுக்கு ரூ.344 கோடி மட்டுமே செலவாகிறது. மீதமுள்ள பணம் மொத்தமும் அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது. இது தவிர லாரி மற்றும் ஆட்டோமொபைல் பொருட்கள் வாங்கும்போது லாரி உரிமையாளர்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

நிதியமைச்சர் அறிவிப்பு:

இந்த நிலையில் சமீபத்தில், தமிழக நிதியமைமச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், தமிழகத்தில் லாரிகளுக்கான வரி கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதைப்பார்த்ததும் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. லாரிகளுக்கான வரியை உயர்த்துவதற்கு அவர் ஏற்பாடுகள் செய்து வருவதாக நாங்கள் பயப்படுகிறோம். லாரித்தொழில் நலிவடைந்து வரும் தற்போதைய சூழலில் தமிழக அரசு லாரிகளுக்கான வரியை உயர்த்தினால், இத்ததொழில் மேலும் பாதிக்கப்பட்டு, பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் இத்தொழிலைவிட்டு வெளியேறும் அபாயம் உருவாகிவிடும். இதனால் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்கி வரும் சரக்குப்போக்குவரத்து தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்படும். எனவே தமிழக அரசு லாரிகளுக்கான வரியை உயர்த்தும் எண்ணத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

ஸ்டிரைக் போராட்டம்:

கடந்த மாதம் நாமக்கல்லில் நடைபெற்ற தென்னிந்திய மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பில் (சிம்டா), மத்திய, மாநில அரசுகள் ஆக.9ம் தேதிக்குள், லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்துப்பேசி, கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும், இல்லாவிட்டால் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்படும் என்று கெடு விதித்திருந்தோம். இதுவரை எந்த அரசும் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. எனவே விரைவில் தென்மண்டல மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் கூட்டத்தைக் கூட்டி ஏற்கனவே இயற்றியுள்ள தீர்மானத்தின் பேரில் ஸ்டிரைக் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் அருள், பொருளாளர் சீரங்கன், துணைத்தலைவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 10 Aug 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  2. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  3. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  4. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  5. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  7. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  8. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  9. கோவை மாநகர்
    போராடி தான் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை: வக்கீல் கோபாலகிருஷ்ணன்
  10. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!