அரசு கல்லூரி மைதானத்தில் டைடல் பார்க் கட்ட அளவீடு: மாணவர்கள் போராட்டம்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதாக புகார்.
HIGHLIGHTS
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், டைடல் பார்க் கட்ட நிலம் அளவீடு செய்ததைக் கண்டித்து மாணவ மாணவியர் வகுப்புகளை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சேலம், ராசிபுரம், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக கல்லூரியின் பின்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் வருவாய் துறையினர் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வருவாய் துறையினரிடம் கேட்டபோது டைடல் பார்க் (தொழில்நுட்ப பூங்கா) கட்டுவதற்காக இடம் அளவீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் பானுமதி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாணவர்கள் கல்லூரி மைதானத்தில் டைடல் பார்க் கட்டினால் மாணவர்கள் உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள இடம் இல்லாமல் போய்விடும். மேலும், மாணவர்களின் கல்வியும் பாதிக்கும். எனவே கல்லூரி மைதானத்தில் டைடல் பார்க் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும், என வலியுறுத்தினர். மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என கல்லூரி முதல்வர் பானுமதி உறுதியளித்தார். இதையேற்று மாணவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்து வகுப்புகளுக்கு திரும்பினர். இச்சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.