நாமக்கல்லில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா
நாமக்கல்லில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஏற்பாட்டின் பேரில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா, நாமக்கல் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
கட்சியின் இலக்கிய பிரிவு அமைப்பாளர் மணிமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தார். கட்சி பிரமுகர்கள் டாக்டர் மாõயவன், விஸ்வநாத், பிரபு, சேகர், ராஜகோபால், சரவணன், ஈஸ்வரன், ராஜவேல் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டு அன்பழகனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
விழாவை முன்னிட்டு, கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள கட்சியின் மூத்த உறுப்பினர்களான ராசப்பன், சீனிவாசன், மொய்தீன், சோலைமுத்து, ராஜீவ், லட்சுமணன் உள்ளிட்ட 100 பேரைப் பாராட்டி பண முடிப்பு வழங்கப்பட்டது.