நாமக்கல்: வரும் 12ம் தேதி 110 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில், வரும் 12ம் தேதி 110 மையங்களில் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறுகிறது.
HIGHLIGHTS
பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் திறனைக் கண்டறியும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத்தேர்வு வருகிற 12ம் தேதி, வெள்ளிக்கிழமை 110 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 183 பள்ளிகளைச் சேர்ந்த 3, 5, 8 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர்.
இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதன்மை கல்வி அதிகாரி மகேஷ்வரி தலைமை வகித்துப் பேசினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமன், விஜயா, சிஇஓவின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், உடற்கல்வி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.