/* */

ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சி: பெற்றோர் சிஇஓவிடம் புகார்

அரசு பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சித்தது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் சிஇஓவிடம் புகாரளித்தனர்.

HIGHLIGHTS

ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சி: பெற்றோர் சிஇஓவிடம் புகார்
X

பைல் படம்.

நாமக்கல் அரசு மகளிர் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் சிஇஓவிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்கள் சிலர், சிஇஓ மகேஸ்வரியிடம் அளித்துள்ள மனுவில், எங்கள் மகள்கள், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். அதில், 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு, அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவரால், பாலியல் தொல்லை நடந்துள்ளது. அந்த மாணவி, தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில், கடந்த 4ம் தேதியன்று, பிறந்த தேதி மற்றும் இறப்பு தேதி (4.12.2021) எனக் குறிப்பிட்டு, நான் இறக்கப்போகிறேன் என்பதை மறைமுகமாக பதிவு செய்துள்ளார்.

அதைப் பார்த்த சக மாணவியர் அதிர்ச்சி அடைந்து, மொபைல் போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரிடமிருந்து பதில் இல்லாததால், சக மாணவியரின் பெற்றோர் சம்பந்தப்பட்ட மாணவியின் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

அப்போது, அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக அவரை தடுத்து, சமாதானம் செய்ததுடன், காரணம் குறித்து கேட்டபோது, பள்ளி ஆசிரியர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வது குறித்து தெரிவித்துள்ளார். மேலும், சக மாணவியர் சிலரும் தங்களுக்கும் இதுபோல் நடந்துள்ளதாக தெரிவித்தனர்.

சம்மந்தப்பட்ட ஆசிரியர், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வதாக தெரிவித்துள்ளனர். ஆசிரியர், மாணவியரிடம் தவறாக நடந்து கொள்வது குறித்து யாரிடமாவது கூறினால், மார்க் குறைப்பேன் என மிரட்டுகிறார். இதுபோன்ற சூழலில், மனம் உடைந்த மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அந்த மாணவியின் நிலைக்கு காரணமான ஆசிரியர் மீது துறை ரீதியாக, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Updated On: 6 Dec 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!