Begin typing your search above and press return to search.
தீபாவளியையொட்டி நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு புஷ்ப அங்கி அலங்காரம்
தீபாவளியையொட்டி நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு புஷ்ப அங்கி அலங்காரம் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் நகரில் புராண சிறப்புப் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர், வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் நாள்தோறும் இங்கு வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று தீபாவளி மற்றும் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு அதிகாலையில் பால், தயிர், நல்லெண்ணெய், மஞ்சள், குங்குமம், சீயக்காய்த்தூள், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் அபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு வகையான மலர்களால் உருவாக்கப்பட்ட மலர் அங்கி சார்த்தப்பட்டு சுவாமிக்கு தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.