/* */

நாமக்கல் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் திருநங்கைகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
X

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா பேசினார்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி முகாம் நாமக்கல்லில் நடைபெற்றது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அடையாள அட்டைகள் குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் கீதா விளக்கம் அளித்தார். தொடர்ந்து அரசு மற்றும் தனியார் துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

மேலும், அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது, பதிவு செய்யும் முறை உள்ளிட்டவை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. முன்னதாக தொழில் முனைவோராக உள்ள திருநங்கைகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டன. நாமக்கல் வேளாண் அறிவியல் மைய பேராசிரியர் முருகன், முன்னாள் படைவீரர் நல அலுவலக பயிற்றுனர் கோமன் உள்பட 60க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 30 March 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  2. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  3. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  5. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  7. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்