விநாயகர் சதுர்த்திக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த கலெக்டரிடம் மனு
Collector Petition - விநாயகர் சதுர்த்தி விழாவில் அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதனை தளர்வு செய்ய கலெக்டரிடம் மனு.
HIGHLIGHTS
Collector Petition -இந்தியா முழுவதும் நாளை 31 ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்திக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி, தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சபரிநாதன் மற்றும் நிர்வாகிகள், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
விநாயகர் சதுர்த்தி விழாவில் அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதனை தளர்வு செய்ய வேண்டும். பள்ளிபாளையத்தில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வைக்கப்படும் சுமார் 20க்கும் மேற்பட்ட சிலைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து, பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில் வைக்கப்படும், அமைப்பின் நிர்வாகிகள் சிறப்புரைக்குப் பிறகு வழக்கம்போல் செல்லும் ஊர்வலப் பாதையில் விசர்ஜன ஊர்வலமாக சென்று பாலம் வழியாக அக்கரையில் உள்ள காவிரி கரையில் சிலைகள் அனைத்தும் விசர்ஜனம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்கு வருவாய்த் துறை மூலம் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்வு செய்ய வேண்டும். அனைவரும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை விமரிசையாக கொண்டாட அனுமதிக்க வேண்டும். பொது இடத்தில் விநாயகர் சிலை வைப்பதற்கும், காவிக்கொடி அமைத்துகொள்வதற்கும், ஒலிபெருக்கி அமைத்துக் கொள்வதற்கும் அனுமதி அளித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2