/* */

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அரவை மார்ச் 31 வரை நீட்டிக்க கோரிக்கை

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின், கரும்பு அரவைக் காலத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க கரும்பு விவசாயிகள் வேண்டுகோள்.

HIGHLIGHTS

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அரவை மார்ச் 31 வரை நீட்டிக்க கோரிக்கை
X

பைல் படம்.

இதுகுறித்து மோகனூர் கூட்டுறவு சர்க்கரை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் மணிவண்ணன், சென்னையில் உள்ள சர்க்கரைத் துறை கமிஷனருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இந்த ஆண்டிற்கான தற்போதைய கரும்பு அரவை நடைபெற்று வருகிறது. தற்போது ஆலை மூலம், விவசாயிகள் பதிவு செய்த 38 ஆயிரம் டன் கரும்பு இதுவரை அறுவடை செய்யாமல் உள்ளது. இந்த நிலையில் ஆலையில் அரவையை 20ம் தேதியுடன் முடிக்க உள்ளனர்.

இதன்படி இம்மாதம் 20ம் தேதியுடன் ஆலையில் அரவை நிறுத்தப்பட்டால், விவசாயிகளின் தோட்டங்களில் உள்ள பதிவு செய்யப்பட்ட 18 ஆயிரம் கடன் கரும்பு அரவை செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்திற்கு உள்ளாவார்கள். எனவே கரும்பு விவசாயிகளின் நலன் கருதி ஆலையின் அரவைக் காலத்தை 10 நாட்கள் நீட்டித்து, வருகிற மார்ச் 31வரை ஆலையில் கரும்பு அரவை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 17 March 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...