Begin typing your search above and press return to search.
தபால் அலுவலகங்களில் யுபிஐ, கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தலைமை தபால் அலுவலகங்களில், யுபிஐ அல்லது கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து, நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள தபால் அலுவலகங்களில், ரிஜிஸ்டர் போஸ்ட், ஸ்பீட் போஸ்ட், அயல் நாடுகளுக்கு அனுப்பும் ஸ்பீட் போஸ்ட், ரிஜிஸ்டர் பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது. இதனிடையே, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், தபால் அலுவலகங்களில் ரிஜிஸ்டர் போஸ்ட், ஸ்பீட் போஸ்ட், அயல் நாடுகளுக்கு அனுப்பும் ஸ்பீட் போஸ்ட் ரிஜிஸ்டர் பார்சல் உள்ளிட்ட சேவைகளுக்கு, இனி, யுபிஐ அல்லது கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி எளிமையாக பணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.