/* */

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் களையிழந்த காணும் பொங்கல் விழா

நாமக்கல் மாவட்டத்தில் காணும் பொங்கல் விழாவை கொண்டாட முடியாமல் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். ரோடுகள் வெறிச்சோடியது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் களையிழந்த காணும் பொங்கல் விழா
X

இன்று கொரோனா முழு ஊரடங்கால் நாமக்கல் பஸ் நிலையம் மற்றும் நகரில் அனைத்து ரோடுகளும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவிவருகிறது. இதை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாகவும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. தைப்பொங்கல் விழாவில், கடந்த 2 நாட்களாக, பொங்கல் பண்டிகை மற்றும் மாட்டுப்பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

இன்று காணும் பொங்கல் பண்டிகை. வழக்கமாக காணும் பொங்கல் பண்டிகையின் போது நாமக்கல் மாவட்டத்தில் கொமாரபாளையம், பள்ளிபாளையம், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், மோகனூர் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் பலரும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் காவிரி கரையோரரங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, அப்பகுதிகளில் ஆங்காங்கே கூட்டமாக கூடி சிற்றுண்டி அருந்தி, விளையாடி மகிழ்வார்கள்.

சிறு குழந்தைகள் இந்த நாளை மிகவும் குதூகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

முழு ஊரடங்கை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், நேற்று நள்ளிவுரவு முதல் பஸ்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இன்று ஜவுளி கடைகள், நகைக்கடைகள், மளிகைக்கடைகள், உழவர் சந்தை, காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அனைத்து மெயின் ரோடுகளும், தெருக்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன. முக்கிய இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களில் செல்வோரை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வைத்தனர். விதிமுறைகளை மீறி சென்றோரிடம் அபரதாம் வசூலிக்கப்பட்டது.

ஆஸ்பத்திரிகள், மருந்துக்கடைகள், ஆம்புலன்ஸ், பால் விற்பனை நிலையங்கள், பத்திரிக்கை விநியோகம், ஓட்டல்கள் முதலிய அத்தியாவசியசேவைகள் அனுமதிக்கப்பட்டன. பண்டிகை விடுமுறையால் ஒரு சில ஓட்டல்கள் மட்டுமே திறக்கப்பட்டன. ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது.

Updated On: 16 Jan 2022 4:46 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  2. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  3. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  6. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  10. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...