ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும் விழா
ஈரோடு கருங்கல்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும் விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
ஈரோடு கருங்கல்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் அனைத்து வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும் உத்தரவு நிறைவேற்றும் வகையில், ஈரோடு கருங்கல்பாளையம் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் உறுப்பினர்களுக்கு தமிழ் பெயர் பலகை வழங்குதல் மற்றும் உறுப்பினருக்கு மருத்துவ உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, சங்க செயலாளர் பொ.இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அந்தோணி யூஜின் வரவேற்றார். பொருளாளர் பிரேம்குமார் நன்றி தெரிவித்தார். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம் கலந்து கொண்டு வணிகர்களுக்கு தமிழ் பெயர் பலகை மற்றும் உறுப்பினருக்கு மருத்துவ உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் இரா.க.சண்முகவேல், மாவட்ட பொருளாளர் உதயம் பி.செல்வம், மாவட்ட துணைத்தலைவர் ப.சா. சுந்தர்ராஜன், காலிங்கராயன்பாளையம் சேகர், இளைஞர் அணி நிர்வாகிகள் ராஜா, சேகர், மூலப் பட்டறை சங்க நிர்வாகிகள் விஜயகுமார், தங்கராஜ், ரியாஸ், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.