நாமக்கல்லில் சுதந்திரதின 75ம் ஆண்டு அமிர்த பெருவிழாவையொட்டி ஓவியப்போட்டி
சுதந்திரதினத்தின், 75ம் ஆண்டு அமிர்த பெருவிழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் நடந்த ஓவியப்போட்டியில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
HIGHLIGHTS
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், சென்னையில் செயல்பட்டு வரும், மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், நாமக்கல்லில் 5 நாட்கள், இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு அமிர்த பெருவிழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில், சுதந்திரமும் பெண்கள் முன்னேற்றமும் என்ற தலைப்பில், வாட்டர் கலர் மூலம் ஓவியங்கள் வரைந்தனர்.
நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குனர் சிவக்குமார் தலைமையில், தர்மபுரி கள விளம்பர அலுவலர் பிபின் நாத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.