/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் 25 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் 25 டன் காய்கறிகள், ரூ.7.38 லட்சம் மதிப்பில் விற்பனையானது.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் 25 டன் காய்கறி விற்பனை
X

நாமக்கல் பார்க் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரை இந்த உழவர் சந்தைக்கு விவசாயிகள் காய்கறி மற்றும் பழங்களை கொண்டுவந்த விற்பனை செய்வார்கள். ஏராளமான பொதுமக்கள் நேரடியாக காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் விற்பனை நடைபெறும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ராம நவமி உற்சவம் என்பதால், வழக்கத்தைவிட காய்கறி விற்பனை அதிகம் நடைபெற்றது. மொத்தம் 22,350 கிலோ காய்கறிகளும், 3,400 கிலோ பழ வகைகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 750 கிலோ காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை நடைபெற்றது.

மொத்தம் 195 விவசாயிகள், 50க்கும் மேற்பட்ட வகையான காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 5,270 பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். ஒரு நாளில் மொத்த விற்பனை மதிப்பு ரூ.7,38,420 ஆகும்.

Updated On: 10 April 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு